பயணம் என்ற இந்த நூல் மிகப்பெரும் யுத்திகளை, பல்வேறு வகையில் மூளையை கசக்கி மிகப்பெரும் சிந்தனா சக்தியுடன் உருவாக்கப்பட்ட, சமுதாயத்தின் மீது மிகப்பெரும் பற்று கொண்டு உருவாக்கப்பட்ட அரும்பெரும் பொக்கிஷம். இந்தப் பயணமானது கற்பனை கதை போன்று இருந்தாலும் இயற்கையை மனித சமுதாயம் எவ்வாறு சிதைத்து வருகிறது என்பதும், இயற்கையை காக்க பல்வேறு சக்திகள் ஒன்றிணைவது பற்றி நேரடியாகவும், உலகத்தில் தூய்மையான அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படை ஆதாரம் என்பதனை மறைமுகமாக விளக்கும் கதையாக உள்ளது. அன்புத்தம்பி கார்த்திகேயன் தனபால் அவர்கள் இந்த சமுதாய விழிப்புணர்வு புத்தகம் - சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிய நடையில் புரியும்படியும் விரும்பத்தக்கவகையிலும் எழுதியுள்ளார். மேலும், இந்த பயணம் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு நமது வாழ்நாளில் நாம் இனிமேல் கொண்டு மேற்கொள்ளவேண்டிய பயணத்தை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிந்திக்கத் தூண்டியுள்ளது, மாறுபட வேண்டியுள்ளது என்பதனை எடுத்துரைக்கிறது. அன்புத்தம்பி கார்த்திகேயன் தனபால் அவர்களின் முயற்சி மகத்தானது. சமுதாயத்தின் மேல் அவர் கொண்டுள்ள பற்று அளவிட முடியாதது என்பது இந்த பயணத்தின் வழியில் அறியப்படுகிறது. சுற்றுச்சூழல் காக்கவும், சுயநலமற்று அன்பு பெருகவும் அடித்தளமாக விளங்குகிறது இந்த பயணம். P S சக்திவேல் (முன்னுரையாளர்)
Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.
Anbieter: PBShop.store US, Wood Dale, IL, USA
PAP. Zustand: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Artikel-Nr. L2-9798887171449
Anzahl: Mehr als 20 verfügbar
Anbieter: PBShop.store UK, Fairford, GLOS, Vereinigtes Königreich
PAP. Zustand: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Artikel-Nr. L2-9798887171449
Anzahl: Mehr als 20 verfügbar